ஆம்பூரில் தனியார் காலணி நிறுவன வேன் மோதிய விபத்தில் இரு மாடுகள் வெள்ளிக்கிழமை இறந்தன.
ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர், தனக்கு சொந்தமான மாட்டு வண்டியை அதே பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் வெள்ளிக்கிழமை நிறுத்தியிருந்தார். அப்போது, வாணியம்பாடியிலிருந்து ஆம்பூர் நோக்கி வந்த ஆம்பூர் தனியார் காலணி நிறுவன வேன் மாட்டு வண்டி மீது மோதியது. இதில், இரு மாடுகளும் நிகழ்விடத்திலேயே இறந்தன. வேனில் பயணம் செய்த காலணி நிறுவன பெண் தொழிலாளர்கள் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து ஆம்பூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.