திமுகவில் இணைந்த சீனிவாசகாந்தி
By DIN | Published On : 01st April 2019 08:18 AM | Last Updated : 01st April 2019 08:18 AM | அ+அ அ- |

வேலூர் மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் சீனிவாசகாந்தி, அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து தமாகா-வுக்கு மாறி வேலூர் மாநகர் மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்தவர் சீனிவாசகாந்தி. அவர் கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார். கடந்த 2016-ஆம் ஆண்டு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஞானசேகரன் தலைமையில் சீனிவாசகாந்தி உள்பட 70 பேர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து, அதிமுகவில் செயல்பட்டு வந்த சீனிவாசகாந்தி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில், அவர், திமுக பொருளாளர் துரைமுருகன் முன்னிலையில் திமுக-வில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். அவருக்கு துரைமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தினர்.