நெல், அரிசி வியாபாரிகள் சங்க செயற்குழுக் கூட்டம்

குடியாத்தம் நகர நெல், அரிசி வியாபாரிகள் சங்க செயற்குழுக் கூட்டம் தரணம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

குடியாத்தம் நகர நெல், அரிசி வியாபாரிகள் சங்க செயற்குழுக் கூட்டம் தரணம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் என்.இ.கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் டி.ராஜேந்திரன் வரவேற்றார். கௌரவத் தலைவர் பி.என்.எஸ். திருநாவுக்கரசு, துணைத் தலைவர் எம். விநாயகம், நிர்வாகிகள் எம். அருள்பிரகாசம், ஜெ.ரமேஷ்குமார், 
ஆர்.லிங்கப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில் நடைபெற உள்ள தேர்தலில்  பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டுவது, வணிகர்  விரோத சட்டங்களான ஜிஎஸ்டி, உணவுப் பாதுகாப்புச் சட்டம், ஆன்லைன் வர்த்தகம், விலைவாசி உயர்வு போன்றவற்றை எந்த காலத்திலும் அமல்படுத்த மாட்டோம் என்று உறுதி அளிக்கும் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com