பைக் மீது பேருந்து மோதல்: அரசுப் பணியாளர் சாவு

அரக்கோணம் அருகே பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த அரசுப் பணியாளர் புதன்கிழமை இறந்தார்.

அரக்கோணம் அருகே பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த அரசுப் பணியாளர் புதன்கிழமை இறந்தார்.
சம்பத்ராயன்பேட்டையைச் சேர்ந்தவர் பார்த்திபன் (24). இவர், சென்னைத் தலைமை செயலகத்தில் சமூகநலத் துறையில் தட்டச்சராகப் பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் மாதம் 27-ஆம் தேதி அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு பைக்கில் சென்றார். 
அரக்கோணம்-நெமிலி சாலை அருகே சென்றபோது தனியார் பேருந்து மோதியதில் பார்த்திபன் பலத்த காயமடைந்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் புதன்கிழமை இறந்தார். இதுகுறித்து நெமிலி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com