510 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

வாணியம்பாடி பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 510 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 510 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரி மாணவர்களுக்கு வளாக மற்றும் வெளிவளாக நேர்காணல் கடந்த 3 மாதங்களாக நடைபெற்றது. இதில், 25 தனியார் நிறுவனங்கள் நேர்முக தேர்வை நடத்தின. இதில், 510 மாணவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கல்லூரி முதல்வர் பி.நடராஜன் தலைமை வகித்தார். ஏபிஐ ஸோவா டெக் நிறுவனப் பொது மேலாளர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கான ஆணைகளை வழங்கினார். 
தனியார் நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலர்கள், கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி ரவீந்திரன், அனைத்துத் துறைப் பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com