சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை அதிமுக கூட்டணி  உறுதி செய்யும்

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை அதிமுக கூட்டணி  உறுதி செய்யும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை அதிமுக கூட்டணி  உறுதி செய்யும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதி  பாமக வேட்பாளர் ஏ.கே மூர்த்தியை ஆதரித்து ஆற்காடு பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை இரவு அவர் பேசியதாவது: அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வில் ஒளி வீசும் அரசாக மத்திய, மாநில அரசுகள் இருக்கும். பாஜக தேர்தல் அறிக்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் தரப்படும் என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பு. சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை அதிமுக கூட்டணி  உறுதி செய்யும் என்றார்.
முன்னாள் எம்.பி. ஏ.எம்.வேலு, வேலூர் கிழக்கு மாவட்ட தமாகா தலைவர் ஹரிதாஸ், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் காசிநாதன், பாமக மாநில முன்னாள் துணைப் பொதுச் செயலர்  எம்.கே.முரளி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com