அரக்கோணத்தை அடுத்த நெமிலி பாலா பீடத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பீடாதிபதி எழில்மணி தலைமை வகித்து, கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். பாலாவை பற்றி சென்னை வானதிபதிப்பகம் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.
"ஆன்மிக குரு வழிபாடு' என்ற புத்தகத்தின் முதல் பிரதியை திரைப்பட பாடகர் மது அவரது மனைவி மீனா ஆகியோர் பீடாதிபதி எழில்மணியிடம் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பாடகர் மதுவின் இசைக் கச்சேரி நடைபெற்றது. மோகன் வழிபாடுகளை நடத்தினார். செயலர் முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.