அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த அமைச்சர்

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக  கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர்

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக  கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், குடியாத்தம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.மூர்த்தி ஆகியோரை ஆதரித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் குடியாத்தம் நகரில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார்.
தரணம்பேட்டையில் முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் ஆலியார் தெரு, சித்தூர் கேட், புது ஆலியார் தெரு, நீலிக்கொல்லை தெரு, பலமநேர் சாலை உள்ளிட்ட இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார். 
அவருடன் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ராஜன், அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என்.பழனி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், நிர்வாகிகள் எஸ்.ஐ.அன்வர்பாஷா, டி.அக்பர் ஷெரீஃப், சலீம், இர்பான் உள்ளிட்டோர் இருந்தனர்.

ஆம்பூரில்...
மாதனூர் அருகே ஆம்பூர் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அதிமுக வேட்பாளர் ஜெ. ஜோதிராமலிங்கராஜா திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார்.
மாதனூர் அருகே உள்ள வடக்காத்திப்பட்டி கிராமத்தில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com