தேர்தல் விழிப்புணர்வுக்கு ராட்சத பலூன்

ஆம்பூரில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வுக்காக ராட்சத பலூன் செவ்வாய்க்கிழமை பறக்கவிடப்பட்டது.


ஆம்பூரில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வுக்காக ராட்சத பலூன் செவ்வாய்க்கிழமை பறக்கவிடப்பட்டது.
ஆம்பூர் தொகுதி இடைத் தேர்தல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. 
விழிப்புணர்வு ஊர்வலம், உறுதிமொழி ஏற்பு ஆகியவை நடத்தப்பட்டன. ஆம்பூர் நகராட்சி சார்பாக ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வுக்காக ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com