குடியாத்தம் மீனாட்சி அம்மன் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் சுவாமிகளுக்கு புதன்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலை 7 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை, வேதிகார்ச்சனை, அக்னிகார்யம், திரவிய ஹோமம், கலசாபிஷேகம், மகா தீபாராதனை ஆகியன நடைபெற்றன.
தொடர்ந்து அம்மனுக்கு சீர் வரிசைப் பொருள்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. 11.30 மணியளவில் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
மதியம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது.
இதில், அரசு வழக்குரைஞர் கே.எம். பூபதி, ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் மா.கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் நகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் எஸ். தோன்றல் நாயகன், ஏ.சுகுமாரன், எம்.ஆர்.சீனிவாசன், ஏ.ராஜசேகர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.