கல் குவாரியில் அனுமதியின்றி கற்கள் எடுத்த 6 பேர் கைது

பாணாவரம் அருகே கல் குவாரியில் அரசு அனுமதியின்றி கற்களை எடுத்துச் செல்ல முயன்ற 6 பேரை போலீஸார் கைது

பாணாவரம் அருகே கல் குவாரியில் அரசு அனுமதியின்றி கற்களை எடுத்துச் செல்ல முயன்ற 6 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து இரு ஆட்டோக்கள், இரு பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
குப்புகல்மேடு கிராமம் அருகே கல் குவாரியில் சிலர் அரசு அனுமதியின்றி கற்களை எடுத்துச் செல்வதாக பாணாவரம் வருவாய் ஆய்வாளர் எத்திராஜுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாணாவரம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று, கற்கள் எடுத்துக் கொண்டிருந்த குப்புகல்மேடு கிராமத்தைச் சேர்ந்த விஜய் (24), திலிப் (19), பாண்டியன் (35), செந்தூர்பாண்டியன் (29), ஏழுமலை (55), ரவி (54) ஆகிய 6 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த இரு ஆட்டோக்கள், இரு பைக்குகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com