கெங்கையம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா

குடியாத்தம் கோபலாபுரம் கெங்கையம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 

குடியாத்தம் கோபலாபுரம் கெங்கையம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
இதையொட்டி, மூலவர் அம்மனுக்கு சுமார் 2 லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது . இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ரா.கார்த்திகேயன், கோயில் தர்மகர்த்தா எம்.குப்புசாமி, நாட்டாமை ஆர்.ஜி.எஸ்.சம்பத், திருப்பணிக் கமிட்டித் தலைவர் 
ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

கருமாரியம்மன் கோயிலில்...
ஆம்பூர், ஆக. 4: ஆம்பூர் ஏ-கஸ்பா கருமாரியம்மன் கோயிலில் ஆடி  விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆடி விழாவையொட்டி, அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com