வேலூர் மாவட்ட சாரண, சாரணிய இயக்கம் சார்பில் ராஜ்ய புரஸ்கார் தேர்வு முகாம் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பள்ளி வளாகத்தில் 3 நாள்கள் நடைபெற்றது.
வேலூர் கல்வி மாவட்ட அளவில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை முகாம் நடைபெற்றது. நாராயணி பள்ளி இயக்குநர் எம்.சுரேஷ்பாபு தலைமை வகித்தார். முதல்வர் சரவணகுமார் வரவேற்றார். சாரணர் இயக்கச் செயலர் சிவக்குமார், பொருளாளர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாரண ஆசிரியர் சதீஷ்குமார் நன்றி கூறினார். முகாமில் சக்தி அம்மா பங்கேற்று ஆசி வழங்கினார்.
வேலூர் கல்வி மாவட்டத்தில் 18 பள்ளிகளைச் சேர்ந்த 150 சாரணர்கள், 15 பள்ளிகளைச் சேர்ந்த 100 சாரணியர்களும் கலந்து கொண்டனர். பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், சாரண ஆசிரியர்கள் 50 பேர் கலந்து கொண்டனர்.