வேலூர் மாவட்ட அளவிலான ஜல்சக்தி அபியான் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அ. சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் பார்கவ் தேஜா, பேரூராட்சிகளின் செயற்பொறியாளர்கள் மலர்விழி, ராஜவேலு, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தண்ணீரை சேமிப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.