பைக் மீது வேன் மோதி நடத்துநர் பலி

ஆற்காடு அருகே பைக் மீது வேன் மோதியதில் அரசுப் பேருந்து நடத்துநர் உயிரிழந்தார்.

ஆற்காடு அருகே பைக் மீது வேன் மோதியதில் அரசுப் பேருந்து நடத்துநர் உயிரிழந்தார்.
வளையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (36). அரசுப் பேருந்து நடத்துநர். இவர், திங்கள்கிழமை இரவு ஆரணிக்கு பைக்கில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
தாமரைப்பாக்கம் சோதனைச் சாவடி அருகே சென்றபோது காஞ்சிபுரத்திலிருந்து ஆரணி நோக்கி எதிரே வந்த வேன் மோதியது. இதில் பழனி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  இதுகுறித்து திமிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com