ஆங்காயம் மாரியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, காலை முதல் மாலை வரை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாயொட்டி, வைசியர் வீதியில் அமைந்துள்ள செல்வநாகலம்மனுக்கு தலையில் கரகம் வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர்.