"ரேஷன் கடை விற்பனைக் கருவி,  கணக்குகள் சமூக தணிக்கை செய்யப்படும்'

15-ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் ரேஷன் கடைகளின் விற்பனை முனையக் கருவி

15-ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் ரேஷன் கடைகளின் விற்பனை முனையக் கருவி (பிஓஎஸ்) மற்றும் தொடர்புடைய கணக்குகள் சமூக தணிக்கைக்கு உள்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அ. சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
கிராமங்களில் செயல்படும் ரேஷன் கடைகளின் முந்தைய 6 மாதகாலத்துக்குரிய விற்பனை முனையக் கருவி (பிஓஎஸ்) மற்றும் ரேஷன் கடையின் கணக்குகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் சமூக தணிக்கைக்காக பொதுமக்கள் முன்னிலையில் வைக்கப்படும். 
கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்கள் பொது விநியோகத் திட்டம் தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com