குடியாத்தத்தை அடுத்த பூசாரிவலசையில் உள்ள காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய இந்து அன்னையர் முன்னணி சார்பில் வெள்ளிக்கிழமை பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
கிராம எல்லையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மை ஜெகன்நாதன், இந்து முன்னணி மாவட்டச் செயலர் ஆதிசிவா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.