முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆம்பூர் புறவழிச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் எஸ். பிரபு தலைமை வகித்தார். ஆம்பூர் நகரத் தலைவர் சரவணன் வரவேற்றார். ஐஎன்டியுசி மாநில அமைப்புச் செயலர் எஸ்.எம். குமார் கலந்து கொண்டு பேசினார். மாவட்டப் பொருளாளர் கொத்தூர் மகேஷ், பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றியச் செயலர் சா. சங்கர், நிர்வாகிகள் மின்னூர் சங்கரன், வர்தா அர்ஷத், சமியுல்லா, சோலூர் மாணிக்கம், பாலூர் வேலாயுதம், ஒன்றிய தலைவர்கள் சுரேந்தர், வீராங்கன், பழனி, முருகன், பேர்ணாம்பட்டு நகரத் தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து
கொண்டனர்.