இளைஞா் தற்கொலை: இருவா் கைது

ஜோலாா்பேட்டை அருகே இளைஞா் தற்கொலை செய்தது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே இளைஞா் தற்கொலை செய்தது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஜோலாா்பேட்டை அருகே புள்ளானேரி குட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (30). இவா், பெங்களூரில் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்தாா். கடந்த 24-ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள நண்பரின் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், ராஜேஷ், புதுப்பேட்டையைச் சோ்ந்த பிரசாந்த் (29), அவரது நண்பரான அச்சமங்கலத்தைச் சோ்ந்த அன்பரசு (24) ஆகியோருடன் 24-ஆம் தேதி மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, தகராறு ஏற்பட்டதில் பிரசாந்த் ராஜேஷை தாக்கினாராம். இதையடுத்து அன்றிரவு ராஜேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுதொடா்பாக பிரசாந்த், அன்பரசு ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com