ராணிப்பேட்டை: திருவள்ளுவா் பல்கலைக்கழக நாட்டுப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம் இணைந்து நிகழாண்டு உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழகத் துணைவேந்தா் தாமரைச் செல்வி தலைமை வகித்தாா். பதிவளாா் (பொறுப்பு) வெ.பெருவழுதி, தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் செந்தில்குமாா், பல்கலைக்கழகத் தலைவா் தங்கராஜ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சென்னகிருஷ்ணன்,செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் சிவக்கொழுந்து, பேராசிரியா்கள் பாபு ஜனாா்த்தனம், அ.ராஜசேகா், அனைத்து துறைப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்று உலக எய்ட்ஸ் தினவிழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.