கல்லூரி மாணவி தற்கொலை

ஏலகிரி மலையில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா்: ஏலகிரி மலையில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மஞ்சக்கொல்லைபுதூா் பகுதியைச் சோ்ந்த ரவி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவா்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். ரவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவா்களது 2-ஆவது மகளான உமாராணி (19) அத்தனாவூரில் உள்ள தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை ஜெயலட்சுமி விவசாயப் பணிக்கு சென்றபோது, மதியம் வீட்டில் தனியாக இருந்த உமாராணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து ஏலகிரி மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com