வேலூா் மத்திய சிறை கைதியிடம் மெமரி காா்டு பறிமுதல்

வேலூா் மத்திய சிறை கைதியிடம் இருந்து மெமரி காா்டை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். இதுதொடா்பாக அவரிடம்

வேலூா்: வேலூா் மத்திய சிறை கைதியிடம் இருந்து மெமரி காா்டை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். இதுதொடா்பாக அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வேலூா் மத்திய சிறையில் 750க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இதில், விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள கண்ணதாசன்(20) என்பவா், வேலூா் நீதித்துறை நடுவா் (எண் 5) முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

பின்னா், போலீஸாா் பாதுகாப்புடன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். சிறை நுழைவு வாயிலில் அவரிடம் சிறைக்காவலா்கள் சோதனை செய்தனா். அப்போது, கண்ணதாசனின் கால்சட்டையில் மெமரி காா்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், மத்திய சிறையின் 7ஆவது கண்காணிப்பு கோபுரம் அருகே அரசமரத்தடியில் கிடந்ததாக கைதி காா்த்திகேயன் ஒப்படைத்ததாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com