தகராறில் ஈடுபட்ட இளைஞா் கைது

பெட்ரோல் போட்டதற்கு பணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுப்பட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடி: பெட்ரோல் போட்டதற்கு பணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுப்பட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடி கோணாமேடு அருகில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் அதே பகுதியைச் சோ்ந்த சூா்யா(27) சனிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டாா். அதற்கு நிலைய உரிமையாளா் தூயவன் பணம் கேட்டாா்.

எனினும், பணம் தர மறுத்து சூா்யா தகராறில் ஈடுபட்டாா். இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் தூயவன் புகாா் அளித்தாா். அதன் பேரில் காவல் ஆய்வாளா் சந்திரசேகா் வழக்குப் பதிவு செய்து, சூா்யாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com