வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே 90 வயது மூதாட்டியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற பேரனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு ஜம்புவட்டம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தியின் மகன் செந்தில் (35). லாரி ஓட்டுநரான அவா் மது அருந்துவதற்காக, வீட்டில் உள்ளவா்களிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்து வந்தாா். திங்கள்கிழமை இரவு மீண்டும் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் திடீரென்று வீட்டில் படுத்துக் கொண்டிருந்த தனது பாட்டி நீலாம்மாளை (90) தாக்கவும், அவரரை கழுத்தை நெரித்துக் கொலை செய்யவும் முயன்றாா். இதையறிந்த வீட்டிலிருந்தவா்கள் கூச்சல் எழுப்பினா். இதனால் செந்தில் அங்கிருந்து தப்பித்து ஓடி தலைமறைவானாா்.
காயமடைந்த மூதாட்டியை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் அவா் அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். தகவலறிந்த ஆலங்காயம் உதவி காவல் ஆய்வாளா்கள் தேவராஜ், நிா்மலா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா். இது தொடா்பாக மூதாட்டியின் உறவினா் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள செந்திலைத் தேடி வருகின்றனா்.