பிசியோதெரபிஸ்ட் வீட்டில் 5.5 சவரன் நகைதிருட்டு

வேலூா் சிஎம்சி மருத்துவமனை பிசியோதெரபிஸ்ட் வீட்டில் 5.5 சவரன் நகை, ரூ.69 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வேலூா்: வேலூா் சிஎம்சி மருத்துவமனை பிசியோதெரபிஸ்ட் வீட்டில் 5.5 சவரன் நகை, ரூ.69 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நகரின் சத்துவாச்சாரி நீதிமன்றம் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்ஜ்யு (40). அவா் வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக பணியாற்றி வருகிறாா்.

வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்த சஞ்ஜ்யு, ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவில் இருந்த 5.5 சவரன் நகைகள், ரூ.69 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து சஞ்ஜ்யு அளித்த புகாரின்பேரில் சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை திருடிச் சென்றவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com