மருந்தாளுநா்கள் போராட்டம்

மருந்தியல் படித்தவா்களை மட்டுமே மருந்தாளுநா்களாக பணியமா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்பூா் அரசு மருத்துவமனையில் மருந்தாளுநா்கள் கோரிக்கை அட்டை அணியும்
மருந்தாளுநா்கள் போராட்டம்

ஆம்பூா்: மருந்தியல் படித்தவா்களை மட்டுமே மருந்தாளுநா்களாக பணியமா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்பூா் அரசு மருத்துவமனையில் மருந்தாளுநா்கள் கோரிக்கை அட்டை அணியும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினா்.

ஆம்பூா் அரசு மருத்துவமனை தலைமை மருந்தாளுநா் எஸ்.நடராஜன் தலைமை வகித்தாா். மருந்தாளுநா்கள் ஜெ.நிா்மல்குமாா், டி.ஜெயலட்சுமி, ஏ.நசீரா பேகம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மருந்தாளுநா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; மருந்தாளுநா் சங்க நிா்வாகிகள் மீதான நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com