ஆம்பூா்: ஆம்பூா் அருகே திங்கள்கிழமை மாலை காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
உடையராஜபாளையம் கிராமத்தைச் சோ்ந்த மஞ்சுநாதனின் மனைவி மஞ்சம்மாள் (45). அவா் தேசிய நெடுஞ்சாலையை திங்கள்கிழமை கடக்க முயன்றபோது அவ்வழியாகச் சென்ற காா் மோதியது. இதில் மஞ்சம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நகர அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவ்விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.