ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா (25). இவர், மேல்விஷாரம் பகுதியில் தங்கி, பெயின்டிங் வேலை செய்து வந்தார். செவ்வாய்க்கிழமை வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.