ஆம்பூர் நீதிமன்றம் எதிரில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆம்பூர் பார் அசோசியேஷன் சார்பில் இளம் வழக்குரைஞர்களுக்கு ரூ. 10 ஆயிரம் உதவித் தொகை, நூலகம், கணினிமுறை, அடிப்படை வசதிகள், சேமநலநிதி உதவி உள்ளிட்ட பல்வோறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு பார் அசோசியேஷன் தலைவர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். செயலர் பிரித்திவிராஜ், வழக்குரைஞர்கள் ராம்தாஸ்காந்தி, பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.