விபத்தில் தொழிலாளி சாவு

சென்னை திருவேற்காடு வடநூம்பல் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (49). தொழிலாளியான இவர், கிருஷ்ணகிரியில் இருந்து

சென்னை திருவேற்காடு வடநூம்பல் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (49). தொழிலாளியான இவர், கிருஷ்ணகிரியில் இருந்து லாரியில் டைல்ஸ் ஏற்றி கொண்டு சென்றார். அவர் டைல்ஸ் மீது அமர்ந்து பயணம் செய்தார். பச்சக்குப்பம் மேம்பாலத்தில் சென்றபோது சேகர் லாரியிலிருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாகச் சென்ற வாகனம் மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com