மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக் கழகத்தில் பிப். 22 முதல் 24-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு உலக திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் வேலூர் மாவட்டம், கரும்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழாசிரியர் துரை.கருணாகரன் பங்கேற்று ஆய்வுரை நிகழ்த்த உள்ளார்.