திருமால்பூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அரக்கோணத்தை அடுத்த திருமால்பூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த திருமால்பூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருமால்பூரில் உள்ள அஞ்சனாட்சி அம்பாள் சமேத மணிகண்டீஸ்வரர் கோயிலின் தெற்கே அமைந்துள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புனராவர்தன, ரஜிதபந்தன மகாகும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 8.45 மணி அளவில் கோபுரக் கலசங்களின் மீது புனிதநீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் மகாகும்பாபிஷேகத்தை நடத்தினர். இந்த விழாவில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com