குடியாத்தத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை

குடியாத்தம் ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம், கோவை, லால்பாக், பிருந்தாவன் ஆகிய விரைவு  ரயில்கள் நின்று

குடியாத்தம் ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம், கோவை, லால்பாக், பிருந்தாவன் ஆகிய விரைவு  ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என குடியாத்தம் அரிமா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
இதுகுறித்து ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் இ. நித்யானந்தத்திடம், அரிமா சங்கத் தலைவர் எம்.கே. பொன்னம்பலம், நிர்வாகிகள் விவேகானந்தம், எஸ்.ஏ. கலிமுல்லா, ஏ. சுரேஷ்குமார், ஜெ.பாபு ஆகியோர் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், குடியாத்தம் ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம், கோவை, லால்பாக், பிருந்தாவன் ஆகிய விரைவு  ரயில்கள் நின்று செல்ல வேண்டும், குடியாத்தம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு சீசன் டிக்கெட்  (மாதாந்திர சலுகைக் கட்டணம்) வழங்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டதை செயல்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com