புத்தாண்டு தினத்தன்று வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27 குழந்தைகள் பிறந்துள்ளன.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் ரா.சாந்திமலர் கூறியது: ஜன.1-ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையில் 27 குழந்தைகள் பிறந்தன. அதில் 10 ஆண் குழந்தைகள், 17 பெண் குழந்தைகள். 18 குழந்தைகள் சுகப் பிரசவத்திலும், 9 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தன எனத் தெரிவித்தார்.
புத்தாண்டில் பிறந்த குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்மார்களை கல்லூரி முதல்வர் ரா. சாந்தி மலர் புதன்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மகப்பேறு துறைத் தலைவர் மருத்துவர் வினிதா பத்மினி, மருத்துவர் அருமை கண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.