நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு சீல்

ஜோலார்பேட்டை நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு சீல்' வைக்கப்பட்டது.


ஜோலார்பேட்டை நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு சீல்' வைக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை நகராட்சிப் பகுதிகளில் நகராட்சிக்குச் சொந்தமான 50-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளில் வாடகை வசூல் செய்ய நகராட்சி ஆணையர் விசாலாட்சி உத்தரவிட்டார். அதன்பேரில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாடகை செலுத்தாத கடைகளை ஆய்வு செய்தனர். இதில், ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டல் தெரு பகுதிகளில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு நகராட்சி அலுவலர்கள் சனிக்கிழமை சீல்' வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com