ஆற்காடு தோப்புகானா அண்ணபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடார வள்ளியில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, ராஜமன்னார், ஆண்டாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் திருக்கல்யாண ஊர்வலம் நடைபெற்றன. தொடர்ந்து திருக்கல்யாணம் மகா தீபாராதனை நடைபெற்றன.
விழாவில், வட்டாட்சியர் சுமதி, திருப்பணிக் குழுத் தலைவர் கு.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.