மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்து ஆம்பூர் அருகே சனிக்கிழமை விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு முனீஸ்வரன் நகரைச் சேர்ந்த பக்தர்கள் பேருந்து மூலம் மேல்மருவத்தூருக்குச் சென்றனர். பேருந்தை விஜி ஓட்டிச் சென்றார்.
ஆம்பூரை அடுத்த கீழ்முருங்கை கிராமம் அருகே சென்றபோது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செடிகளுக்கு தொழிலாளர்கள் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது மோதியது. பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் ராஜசேகர் (40), சுமதி, பாக்கியலட்சுமி (60) பத்மா, துர்கா உள்ளிட்ட 8 பேர் காயமடைந்து, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்கு பதிவு செய்து
விசாரித்து வருகின்றனர்.