பொன்னை பகுதிக்கு அருகே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க பணியாளர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 7-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொன்னையை அடுத்த மாதாண்டகுப்பம் பகுதியில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு மற்றும் ரூ. 1000 பெற வெள்ளிக்கிழமை காலை முதல் பொதுமக்கள்காத்திருந்திருந்தனர். நீண்ட நேரமாகியும் ரேஷன் கடை பணியாளர் வராததால் ஆவேசமடைந்த அவர்கள் பொன்னை நெடுஞ்சாலையில் திடீரென்று மறியலில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.