தடயவியல் நிபுணருக்கு விருது

பெங்களூரில் நடைபெற்ற தேசிய தடய அறிவியல் மாநாட்டில் வேலூரைச் சேர்ந்த தடயவியல் நிபுணருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் நடைபெற்ற தேசிய தடய அறிவியல் மாநாட்டில் வேலூரைச் சேர்ந்த தடயவியல் நிபுணருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
தேசிய தடய அறிவியல் மாநாடு பெங்களூரில் ஜன.10 , 11 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வு மற்றும் வழக்கு சம்பந்தமான கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
இம்மாநாட்டில், வேலூர் மாவட்ட ஓய்வு பெற்ற தடயவியல் துறை உதவி இயக்குநர் கே.பாரி கலந்து கொண்டு கட்டுரை சமர்ப்பித்து 2-ஆம் இடம் பிடித்தார். இவருக்கு மாநாட்டு நிறைவு விழாவில் கர்நாடக மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி விருது வழங்கிப் பாராட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com