ஜோலார்பேட்டையை அடுத்த கட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி செல்வராஜ் (45). இவர், செவ்வாய்க்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள அம்மன் கோயில் அருகில் மது அருந்திய மயங்கிக் கிடந்தாராம்.
வெகுநேரம் ஆகியும் எந்த அசைவுமின்றி கிடந்ததால் அப்பகுதி மக்கள் செல்வராஜை எழுப்ப முயன்றனர். அப்போது, செல்வராஜ் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.