அரக்கோணத்தில்  புத்தகக் கண்காட்சி

தமிழ்நாடு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தினர் மற்றும் வேலூர் பாரதி புத்தகாலயத்தினர் இணைந்து நடத்திய

தமிழ்நாடு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தினர் மற்றும் வேலூர் பாரதி புத்தகாலயத்தினர் இணைந்து நடத்திய ஒரு நாள் புத்தகக் கண்காட்சி அரக்கோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்காட்சி திறப்பு விழாவுக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் வைகறைச்செல்வன் தலைமை வகித்தார். செயலர் சமூகநேசன் எழில்ராஜ் வரவேற்றார். கண்காட்சியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வேலூர் மாவட்டத் தலைவர் கே.எம்.தேவராஜ் திறந்து வைத்தார். முதல் விற்பனையை அரக்கோணம் ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் பெ.இளங்கோ தொடங்கி வைத்தார். 
இதில், நகர திமுக செயலர் வி.எல்.ஜோதி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் அ.கலைநேசன், அரசு ஊழியர் சங்க அரக்கோணம் வட்டத் தலைவர் வி.என்.பார்த்தீபன், பாரதி பல்கலை மன்ற பொதுச்செயலர் மு.உலகநாதன், சிட்டிபாபு, ஞானமுருகன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர். மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முல்லைவாசன், அரக்கோணம் கிளைத் தலைவர் அந்திக்காற்றுபாலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com