முன்விரோதம்: இளைஞரை சூலத்தால் குத்திய விவசாயி கைது

நாட்டறம்பள்ளி அருகே முன்விரோதத்தில் சூலத்தால் குத்திய விவசாயியை போலீஸார் கைது செய்தனர்.

நாட்டறம்பள்ளி அருகே முன்விரோதத்தில் சூலத்தால் குத்திய விவசாயியை போலீஸார் கைது செய்தனர்.
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் மாமுடிமானப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி அண்ணாதுரை (55). இவருக்கும் கோழிமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரத்துக்கும் (40) இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் சனிக்கிழமை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஏகாம்பரம் அண்ணாதுரையை தகாத வார்த்தையால் திட்டினாராம். இதையறிந்த அண்ணாதுரையின் மகன் சூரியகுமார் (30) ஏகாம்பரத்தை  தட்டி கேட்டாராம். அப்போது  ஏகாம்பரம் அருகில் இருந்த சூலத்தால் சூரியகுமாரை குத்திவிட்டு தப்பிச் சென்றார். பலத்த காயமடைந்த சூரியகுமாரை அருகில் இருந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஏகாம்பரத்தை திங்கள்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com