எருது விடும் விழாவில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு
By DIN | Published On : 29th January 2019 11:46 PM | Last Updated : 29th January 2019 11:46 PM | அ+அ அ- |

கே.வி.குப்பம் அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் காயமடைந்த கல்லூரி மாணவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் கிராமத்தில் எருது விடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த 8 பேரும், லேசான காயமடைந்த 26 பேரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் குடியாத்தம் தாழையாத்தம் பகுதியைச் சேர்ந்த முனிசாமியின் மகனான அரசுக் கல்லூரி மாணவர் தினேஷ்(20) சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக கே.வி. குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.