கர்ப்பிணிகளுக்கு யோகப் பயிற்சி

குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு செவ்வாய்க்கிழமை யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது.

குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு செவ்வாய்க்கிழமை யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது.
உலக யோகா தினத்தையொட்டி, திருப்பத்தூரை அடுத்த குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 150 கர்ப்பிணிகளுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, குனிச்சி வட்டார மருத்துவ அலுவலர் தீபா தலைமை வகித்தார். பொய்கை ஆரம்ப சுகாதார நிலைய யோகா பயிற்றுநரும், மருத்துவருமான கவிதா பங்கேற்று, கர்ப்பிணிகளுக்கு சுகப் பிரசவம் ஏற்படும் வகையிலான யோகாசனப் பயிற்சி அளித்தார்.
அதையடுத்து, கர்ப்பிணிகளுக்கு அரசின் சார்பில் அளிக்கப்படும் மகப்பேறு சத்துணவுப் பெட்டகம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com