ஆம்பூர் அருகே தனியார் தொழிற்சாலையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் ஊராட்சி வீரவர் கோயில் பகுதியில் ஷமில் என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலை கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று காலை மின் கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.