வாணியம்பாடியில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்காயம் ஒன்றிய அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோவி.சம்பத்குமார் தலைமை வகித்தார். மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கினார். வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் பேசினார்.
முன்னாள் எம்எல்ஏ ரமேஷ், ஒன்றிய நிர்வாகிகள் எம்.கோபால், அண்ணாசாமி, கே.பி.மணி, ஜெயசக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாணியம்பாடியில் உள்ள அதிமுக வேலூர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நகரச் செயலர் சதாசிவம் தலைமையிலும், ஆலங்காயம் பேரூராட்சியில் பேரூராட்சி செயலர் பாண்டியன், உதயேந்திரம் பேரூராட்சியில் பேரூராட்சி செயலர் பிச்சாண்டி தலைமையிலும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.