குடியாத்தம் அருகே நகைக் கடையில் பித்தளை மோதிரத்தை தங்க மோதிரம் என்று கூறி விற்க முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சியைச் சேர்ந்த ஆரோக்கியசாமியின் மகன் ஜோசஃப்(45). அவர் குடியாத்தம் சந்தப்பேட்டை பஜாரில் உள்ள ஒரு நகைக் கடையில் வெள்ளிக்கிழமை தனது தங்க மோதிரத்தை விலைக்கு விற்க வந்ததாகக் கூறினார். கடைக்காரர் அந்த மோதிரத்தை வாங்கி உரசிப் பார்த்தபோது அது பித்தளை மோதிரம் என்பது தெரிந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் நகர போலீஸார் ஜோசஃபைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பல கடைகளில் இதுபோல் பித்தளை மோதிரங்களை தங்க மோதிரம் எனக்கூறி மோசடியாக விற்றுப் பணம் பெற்று வந்தது தெரிந்தது. அவரைக் கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.