குடியாத்தம் செதுக்கரை சுயம்பு செல்வ விநாயகர் கோயிலில் ஏகதின சகஸ்ரநாம லட்சார்ச்சனைப் பெருவிழா (நாணயங்களைக் கொண்டு ஒரு லட்சம் அர்ச்சனை) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 5.30 மணிக்கு கோ பூஜை, 6 மணிக்கு லட்சுமி, கணபதி ஹோமம், 8 மணிக்கு கலச அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. 9 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது. மீண்டும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்றது. காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பக்த ஜனசபா தலைவர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், நிறுவனர் ஜே.கே.என்.பழனி, செயலர் கே.எம். பூபதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.