வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வசுந்தரி தலைமை வகித்தார். மாவட்டம் முழுவதும் மோட்டார் வாகன விபத்து, நில ஆர்ஜிதம், தொழிலாளர் வழக்கு, காசோலை உள்ளிட்டவை தொடர்பான 7 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், விபத்தில் காயமடைந்தவர்கள் உள்ளிட்டோருக்கும் இழப்பீட்டு காசோலை வழங்கப்பட்டது. குடும்ப நல நீதிபதி லதா உள்ளிட்ட நீதிபதிகள் இதில் பங்கேற்றனர்.