வேலூரில் மக்கள் நீதிமன்றம்

வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.


வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வசுந்தரி தலைமை வகித்தார். மாவட்டம் முழுவதும் மோட்டார் வாகன விபத்து, நில ஆர்ஜிதம், தொழிலாளர் வழக்கு, காசோலை உள்ளிட்டவை தொடர்பான 7 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், விபத்தில் காயமடைந்தவர்கள் உள்ளிட்டோருக்கும் இழப்பீட்டு காசோலை வழங்கப்பட்டது.  குடும்ப நல நீதிபதி லதா உள்ளிட்ட நீதிபதிகள் இதில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com